Saturday, October 29, 2011

முதியோருக்கு இளையோர் தரும் பரிசு ........


பழுத்த இலையை பார்த்து குருத்து இலை பழித்ததாம். அதற்க்கு பழுத்த இலைபதில் சொல்லாது சிரித்ததாம். சில நாட்களில் அந்த குருத்து இலை பழுத்ததாம். இப்போது அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்ததாம்...............

நேற்று:

இடுகையிட்டு ஆறு நாளகிருச்சு, ஏதாவது எழுதலான்ன ஒரு விசயமும் கிடைக்கல, இப்படித்தான் பாருங்க ஏதாவது நம்ம போட்டோசயாவது வெளியிடலான்னு நேத்து ராத்திரி உக்காந்தேன். மனசுக்கு எதுவும் சரிப்பட்டுவரல, சரி followeroda இடுகைய பாத்து கமாண்டாவது கொடுக்கலான்னு, அப்படியே வலை மேய்ந்து கொண்டிருந்தேன்.

சுமார் பதினோரு மணி இருக்கும்.போன் எனது favorit ரிங் டோனான, 
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று - கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று -என்று கூவியது... அழைத்தது என் நண்பனின் தங்கை, 
அவர் அண்ணா எங்கண்ணன் எங்கையோ போயிட்டு வரும்போது வண்டி எக்சிடன்ட் ஆயிருச்சாம் அப்பா வேற ஊருல இல்ல, அம்மா ரொம்ப பயப்படறாங்க கொஞ்சம் வாங்க என்றார்,


உடனே கிளம்பி போனேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர் போன்பண்ணி சிவக்குமார் ந்க்றவர் வண்டியிலிருந்து விழுந்துட்டதாகவும், நான் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் என்றும், ஜி ஹெச் க்கு உடனே கிளம்பி வரும்படி சொன்னதாகவும் சொன்னார். 
நான் போன் வந்த நெம்பரை வாங்கி எனது மொபைலிலிருந்து அந்த எண்ணுக்கு போன் செய்தேன். அவர் சார் பார்டி புல் தண்ணி வண்டி ஓட்ட முடியாம ஒரு மரத்தில மோதி கிழே  கிடந்தார் பாத்தவங்க போன் பண்ணுனாங்க, ஜி ஹெச்சுல அட்மிட் பண்ணிட்டேன். போயி பாருங்க என்று வார்டு நம்பரை சொன்னார். நான் துணைக்கு என் இன்னொரு நண்பரை போன் செய்து வரச்சொல்லி இருவரும் சேர்ந்து ஜிஹெச்சுக்கு போனோம், அங்கு நண்பரை பார்த்து அவருக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டு,  அவங்க தாயாருக்கு போன் செய்து ஒன்றும் பயப்பட வேண்டாம், சாதாரண காயம் தான் என்றும், காலையில் அவருக்கு தேவையான சில பொருட்களை எடுத்து வரும் படியும்,
காலை வரை நாங்கள் இருப்பதாகவும் சொல்லி போனை கட் செய்தேன்.

அப்போது அந்த வார்டு காப்பாளரிடம் ஒரு முதியவர் பேசிகொண்டிருந்தார், நமக்கு தான் நேரம் போகாது அதோடு பிலாக்கில் எழுத விசயமும் வேண்டுமே காதை கொஞ்சம் அவர் பக்கமாக போகஸ் செய்தேன். 

அவர் பேசியதை வைத்து அட நமக்கு இடுகை கிடைத்து விட்டது, என முடிவு செய்து சற்று நேரத்தில் அவரை நமது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தோம்.

இப்போது அவர் பேசுகிறார் கேளுங்கள் 
தம்பி என் பேரு ராமசாமி, எனக்கு வயது 79 , எங்க முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு அம்மாள் தவறி கீழே  விழுந்து விட்டார், அவர இங்க அட்மிட் பண்ணி 4  நாளாச்சு. அந்தம்மாவுக்கு ரெண்டு பொண்ணுங்க, அவங்க கவனிக்க முடியலன்னு நா இருக்கற ஹோம்ல கொண்டு வந்து விட்டுட்டாங்க, இப்ப நாங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து பாத்துக்கறோம் என்றார்,
எ ஊரு மேட்டுப்பாளையம் பக்கத்தில ஆலங்கொம்பு , நான் ஒரு நெசவாளி தம்பி,  எ சம்சாரம் போயி 16 வருசமாச்சு, எனக்கு நாலு பசங்க, எல்லாம் நல்ல வசதியாத்தான் இருக்காங்க, ஆனா என்ன பாக்க முடியாதுன்னு தொரத்தி விட்டுட்டாங்க, ஊர்ல இருக்கறவங்க சொல்லியும் கேக்க மாட்டேன்னுட்டங்க,அப்பறம் ஊரில் உள்ள சிலர் என்னை விஸ்வநாத் செட்டியார் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர், கடந்த அஞ்சு வருசமா அங்க தான் இருக்கேன், எங்கள் இல்ல மதிய சாப்பாட்டு செலவுக்கு 1200 /- ரூபாய் ஆகிறது , காலை அல்லது மாலை டிபன் செலவு 900 /- ரூபாய் ஆகுது 
மாதத்தில் 15 நாள்  யாராவது இந்த செலவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.
மற்ற நாளில் எங்கள் இல்ல காப்பாளர் பார்த்துக்கொள்கிறார். என்றார் மேலும் ஒரு இரண்டு மணி நேரம் அவரது சொந்த விசயங்களை பற்றி சொன்னார். 
அவரிடம் இல்ல விலாசத்தையும், போன் நம்பரையும் வாங்கிக்கொண்டேன்.
விலாசம்:      விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லம்
அன்னூர்ரோடு, ஜடையம்பாளையம் கிராமம், மேட்டுப்பாளையம்,
போன்:04254 -320792, இல்ல நிர்வாகியின் செல் :8940991805 ,

இன்று.......

வலை நோக்கர்களே,பதிவர்களே இந்த பதிவை படிப்பதோடு நில்லாமல் உங்களால் இயன்றதையோ அல்லது இயன்றவர்களிடமோ இதை சொன்னால் போதும் அவர்களின் ஒரு நேர உணவுக்கு நாம் உறுதியளிப்போம்,

இந்த விசயத்தில் மூன்று விதமான கருத்துக்கள் தோன்றுகிறது

குழலினிது யாழினிது தம் மக்கள் மழழை சொல் கேளாதவர்  என்ற வள்ளுவர் 
மக்கட்பேறு எனும் அதிகாரத்தோடு முதுமை எனும் அதிகாரத்தையும் எழுதி இருக்கலாமோன்னு 

கட்டுரையின் முதலில் சொன்ன பழமொழியை ஏன் எல்லோரும் உணரவில்லை என்று 

இன்று இவர்கள் செய்ததை பார்க்கும் இவர்களின் குழந்தைகள், நாளை இவர்களுக்கு இதையே செய்தால்.........

நாளை: 

முதியவர்கள் வயதால் மட்டுமல்ல.. அறிவாலும் அனுபவத்தாலும் நமக்கு மேலானவர்கள் என்பதை உணர்வோம், உணர்த்துவோம்.

சொல்ல மறந்துட்டேன் அந்த நண்பருக்கு காலை 5 மணியளவில் எல்லாம் இறங்கி சுய நினைவு வந்ததும் அவர் கேட்ட கேள்வி, நான் எப்படி இங்க வந்தேன் என்று ...............

தவறாம கருத்து சொல்லுங்க நான் வளர..........

No comments: