Wednesday, September 26, 2012

SILENT MODE சர்தார் ஜி!

Sep: 20, தினமும் இந்தியாவை உலுக்கும் ஏதாவது ஒரு  பிரச்சனை அவற்றை கண்டும் காணாதது போல் மவுனம் சாதிக்கிறார் இந்திய பிரதமர்.

* இந்தியாவை விடுவோம் இந்த மக்கு பிரதமரால் தமிழர்கள் பட்ட அவதியை,   இப்பொழுதுபடும் அவதியை பாருங்கள். 

* இந்தியாவின் வல்லரசு போதையால் இவர்களின் பரிபூரண ஆதரவோடு ஈழத்து இனப்படுகொலை அரங்கேறியது என்பது உலகம் அறிந்த உண்மை.

* தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டு கொல்வதை தடுக்க சொல்லி தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதை கண்டு கொள்ளாமல் மவுனம் சாதித்ததால்  500கும் அதிகமான மீனவ மக்கள் மாண்டனர். இந்திய கடல்படையை சிங்கள தேசத்து பாதுகாப்புக்கு நிறுத்தினார் மவுனச்சாமியார் மண் மோகன் சிங். 
* இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சே, பாரதிய ஜனதாவின் சுஸ்மா சுவராஜ் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வர இருப்பதை தடுக்க தமிழ் மக்கள் தொடர்ந்த போராட்டத்தை கண்டு கொள்ளாமல் மவுனம் காத்ததால் ஒருவர் தீக்குளித்து இறந்து போனார். தொடர்கிறது போராட்டங்கள் ஆனால் அவரது மவுனமும் தொடர்கிறது.

* நாசகார கூடங்குளம் அணு மின்நிலையத்தை செயல்படுத்த அப்பகுதி கடலோர மீனவர்களை கொன்று குவிக்கிறார். தொடரும் கூடங்குளம் பிரச்னையை சுமூகமாக பேசி முடிக்க வழி செய்யாமல் தொடர் மவுன விரதம் கடைபிடிக்கிறார் பாரத தேசத்தின் பிரதமர் மண்ணு மோகன். 

* முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தி யூடுயூப் பில் வெளிவந்த படத்தை பற்றிய கண்டங்களை இந்திய முஸ்லிம்களும், தமிழக முஸ்லிம்களும் தொடர்ந்து தெரிவித்து வரும் வேளையில் அதைப்பற்றி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்கிறார் நமது இந்திய பிரதமர் மண்ணு மோகன் சிங்.

* இவர் நமக்கு பிரதமரா அல்லது அந்நிய நாட்டுக்கு பிரதமரா புரியவில்லை. ஏன் இந்த மவுனம், யாருக்கு இவர் அடிமை சேவகம் புரிகிறார். இப்படிப்பட்ட ஒரு பிரதமர், ஆட்சியாளர் நமக்கு தேவையா? இந்த பிரச்சனைகளில் யார் முதலில் செயல்படவேண்டும். நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு வழி சொல்ல தெரியாத ஒரு மக்கு பிரதமர் நமக்கு தேவையா?
*மலர்விழி*

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே : மண்ணு...