Thursday, September 1, 2011

வினைத் தீர்க்கும் நாயகனே...!





வழிதேடி வந்தேன் நான் சாமியோ
வழிகாட்ட ஓடிவந்த சாமியோ
வணங்கி கும்புடுறேன் சாமியோ

பச்சிளம் குழந்தை தான் இன்னமும்
பள்ளிப் பாலகனாய் எண்ணமும்
பகுத்தறிவு புகட்டிவிடு இன்னமும்
பனைப் போல வளர்ந்திடுமே எண்ணமும்

அவள் பொறி கடலை படையலும்
பிடிகொழுக்கட்டை அரைப்படி சுண்டலும் 
ஆணைமுகன் உன்னை வணங்கியே
விளைக்கதிர் தானியப் படையலும்


சன்னதியில் கண்டதில்லை உன்னையும்
ஓர் உருவம் உனக்கில்லை எங்கிலும்
பல உயிரில் கலந்திருக்காய் பல திக்கிலும்
வினைத் தீர்க்கும் நாயகனாய் ... 


அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டும் சாமியே .....!






4 comments:

ரைட்டர் நட்சத்திரா said...

பதிவிட்டதற்கு நன்றி

Aathira mullai said...

அருமையாக உள்ளது கணேச துதி.. அனைத்து நலங்களும் அருள் இப்போனனாளில் வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி.

Anonymous said...

விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்...தினேஷ்குமார்

Anonymous said...

என் விருப்பத்துக்குரிய விநாயகருக்கு முதல் வணக்கம்.என் தளத்தில் பதிவுகள் வெளியானவுடன் ஓடோடி வந்து முதல் கருத்திடும் உங்களுக்கு இரண்டாவது வணக்கம்.விநாயகர் அகவல் பாடும்போது மனதுக்கு கிடைக்கும் சுகமே தனி. நீங்கள் அதை உணர்ந்திருக்கிறீர்களா?