உடல் இந்த பரந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு ஒரு இருப்பிடம்
தான் நமது இந்த உடல்.
ஒருவரின் இலட்சியங்கள், செயல்கள் உயர்ந்ததாக இருந்தாலும்,
உடலை நல்ல முறையில் ஒத்துழைக்க வில்லை எனில்,
அவரது வாழ்க்கை பாதி கிணறு தாண்டிய கதை தான்.
உடலை பாதுகாத்து நோயில்லா வாழ்க்கை வாழ்வது
அவரவர் கையிலே தான் உள்ளது.
மனித உடலின் அமைப்பை சித்தர் பாடல் ஒன்று
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
" கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலை நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே"
உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி
வைத்து, அவற்றின் "இருப்பிடம்" மாறிவிடாமல்
இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து ,
நரம்புகளால் இழுத்துக் கட்டி,
தோலால் மூடி, அவற்றிற்கு இடையே தசைகளைச்
சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே
வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி
உடல் என்ற ஒரு உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக
சித்தர் பாடல் கூறுகின்றது.
" உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே "
உடலுக்கு உயிரும் உயிருக்கு உடலும் தான் ஆதாரம்
என்பதனை "திரு மூலர்" பாடல் உணர்த்துகின்றது.
ஒவ்வொரு மனிதனின் உடல் அவரவரின் கைகளினால்
எட்டு ஜான் உயரமும், நான்கு ஜான் அகலமும்
கொண்டதாக இருக்கும்.
மனிதர்களின் தேகமானது 96 தத்துவங்களை
உள்ளடக்கியதே.
பூதம் 5 + பொறி 5 = 10
புலன் 5 + ஞானேந்திரியம் 5 = 10
கன்மேந்திரியம் 5 + கரணம் 4 + அறிவு 1 = 10
ஆசயம் 5 + கோசம் 5 =10
வினை 2 + குணம் 3 + ஈடனை 3 = 8
மலம் 3 + மண்டலம் 3 + ராகம் 8 = 14
ஆதாரம் 6 + நாடிகள் 10 = 16
அவஸ்தை 5 + வாயு 10 + தோஷம் 3 = 18
ஆக மொத்தம் 96.
தத்துவங்கள் 96 என்ன என்று சிறிது தெரிந்து கொள்வோமே.....
3 comments:
அருமை அக்கா ..
எங்களை போன்றவர்களுக்கு
திருமூலர் கருத்தை கூறி
புதிய பல விடயங்களை புரியாவைத்தமைக்கு
நன்றி
நல்ல பகிர்வு.
அடுத்த பகிர்வுக்கு காத்து இருக்கிறேன்.
Arputham, arumai, nalla pathvu
anbudan
Rajesh - Tirunelveli
Post a Comment