அறிவாளி என்பவன் தன அறிவை மட்டும் நம்புவான்.
மற்றவைகளில் நம்பிக்கை குறைவாகவே இருக்கும்.
முழுமையான நம்பிக்கைதான் பரி பூரணமான நிம்மதி தரும்.
புத்திசாலி என்பவன் தனது புத்தியை மட்டுமே சிறப்பாக நம்புவான்.
ஆனால், அறிவார்த்தமாக ஈடுபாடோ, செயல்பாடோ இருக்காது.
அறிவை ஆராய்ந்து அறிவது மட்டும் அறிவு.
புத்தியினால் இயற்கையை சார்ந்து அனுசரித்து நடக்கும் இயல்பு உண்டு.
விஞ்சானி என்பவன் தன் கண்டுபிடிப்பு ஆராய்ந்து அறிந்தவற்றின்
நிரூபனத்தால் மட்டுமே நம்புவான். இவனுக்கு வாழ்க்கை புரியாத
புதிர் போலவே தோன்றும். இதனால், இவனுக்கு ஆன்மீகத்தில்
நம்பிக்கை ஏற்படாது.
அறிவாளியும், புத்திசாலியும் தம் தம் அனுமானத்தின் படியே
தீர்மானித்து செயல் படுவர்.
முழுமையான நம்பிக்கை எதிலும் ஏற்படாது.
ஆனால், முட்டாளாக இருப்பவர் எதனையும் நம்பும் தன்மை
கொண்டவராக இருப்பதனால், அவனுக்கு பூரணமான நிம்மதி
கிட்டும்.
1 comment:
முட்டாளாக இருப்பவன் நிம்மதியாக இருக்கிறான் என்பதில் சந்தேகம், ஆனால் அவனின் முட்டாள் தனத்தால் தான் பிறரின் நிம்மதி பறி போகிறது...
உதாரணம்
தமிழகத்தை தற்பொழுது ஆளும் அம்மையார் திருந்தி விட்டார் என்று நம்பி ஓட்டு போட்ட கூட்டத்தால், அவர் திருந்தவில்லை என்று சந்தேகப் பட்ட கூட்டத்தின் நிம்மதி பறி போய் கொண்டு இருக்கிறது
Post a Comment