Wednesday, April 25, 2012

கருணாநிதியின் காலம் கடந்த கவலை!

April 19: தனி ஈழம் கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு 'தனி ஈழம்' என்று பதிலளித்தார். அந்தத் 'தனி ஈழம்' தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு கோரிக்கை அந்த வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் 'தனி ஈழம்' கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சிந்திக்கவும்: திரு கலைஞர் அவர்களே நிறைவேறாத ஆசை என்று பேருக்கு சொன்னால் போதுமா! அந்த ஆசையை நிறைவேற்ற நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தீர்கள் என்பதே இங்கே கேள்வி? உங்கள் குடும்பத்தை வளப்படுத்துவதற்கு நீங்கள் செலவிட்ட நேரத்தை ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்து பேச நீங்கள் செலவிட்டிருந்தால் இத்துணை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்களே.
தமிழர்களின் சுதந்திர தாகத்தை சோனியாவுடன் சேர்ந்து கடிதம் எழுதி கலைத்து விட்டு இப்போது ஏன் நீலிகண்ணீர் வடிக்கிறீர்கள். எம்.ஜி. ஆருக்கு பின்னால் ஜெயலலிதா முதல் பாரதிய ஜனதா, மற்றும் சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் வகைறாக்கள் எல்லோரும் ஈழ விடுதலை போராட்டத்தை தீவிரவாதம் என்றே பேசியும் எழுதியும் வந்தார்கள் என்பதை மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. மொத்தத்தில் இந்த சாக்கடை அரசியல்வாதிகளின் பேச்சால் எந்த பிரோஜனமும் ஏற்ப்பட போவதில்லை என்பது உறுதி.
*மலர்விழி*

No comments: