Saturday, October 27, 2012

இழிவான வழியில் விளம்பரம் தேடும் நடிகர் சரத்குமார்!


Oct 22: கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தியைத் தொடங்க வலியுறுத்தி அக். 31-ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.

"ஏன் வேண்டும் கூடங்குளம்' என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு குறித்து விளக்கப் புத்தகம் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும். கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தியைத் தொடங்கக் கோரி எனது தலைமையில் கோயம்புத்தூரிலிருந்து கூடங்குளம் வரை விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து உதயகுமாருடன் விவாதிக்கத் தயார். காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது, சாதி உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது போன்றவற்றை உதயகுமார் கைவிட வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியிருப்பதுபோல், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பதை அனைவரும் நம்புவோம் என்று கூறினார்.

சிந்திக்கவும்: கலை கூத்தாடிகளின், கடைசி புகலிடம் அரசியல் என்று ஆகிவிட்டது. இவர்கள், அரசியலில் வந்து அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. பெரும்குடிகாரர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து எதிர்கட்சி தலைவராக இருந்து பின்னர் செல்லாகாசாகி போனார்.

இந்த கூத்தாடி சரத்குமார் கட்சி ஆரம்பித்து எதுவும் சிறப்பாக சாதிக்க முடியவில்லை. கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பது மூலம் பெயரும் புகழும் அடையலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார். மக்கள் போராட்டத்தை சாதிய போராட்டம் என்று கொச்சைபடுத்தியது மூலம் நடிகர் சரத்குமார் ஒரு இழிவான பேர்வழி என்பது நிரூபனம் ஆகிறது.

கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பானது என்று புத்தகம் அடித்து வெளியிட போகிறாராம். அணுவையும், குழந்தைகளையும் நேசிக்கும் அதிசய விஞ்சானி அபுல்காலாமும் அவரது விஞ்சான கூட்டமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு பதில் சொல்லாமல் ஓடி போயி விட்டார்கள். இப்பொழுது திடீர் என்று முளைத்திருக்கிறார் இந்த சரத்குமார். முதலில் தோழர் முத்து கிருஷ்ணன் பேசி இருக்கும் விடியோவிற்கு முதலில் பதில் சொல்லட்டும் பின்னர் இவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தலைவர் உதயகுமார் மற்றும் நண்பர்களுக்கு சாவல் விடட்டும்.

குறிப்பு: அணு உலைகளின் தீமைகள் குறித்து அறிந்து கொள்ள சிந்திக்கவும் இணையத்தில் வலதுபுறம் இணைக்கப்பட்டுள்ள தோழர் முத்து கிறிஷ்ணனின் விடியோவை பாருங்கள்

No comments: