Friday, August 12, 2011

!! அறிமுக பதிவு!!



அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம் நான் நீண்ட நாட்களாக ஒரு வலை தளம் ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். அனால் அதற்க்கு சரியான நேரம் இல்லை. வலை என்றாலே மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும், அதை மெயின்டைன் பண்ண ஒரு ஆளுக்கு சம்பளம் தரவேண்டும், என்று ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள். அட நம்மால் எல்லாம் அது முடியாது என விட்டு விட்டேன். ஒருநாள் நண்பர் ராஹுல் அவர்களின் உதவியினால் blogspot பற்றி தெரிந்து கொண்டேன். 

பிறகு நெட் கனைக்ஷன் எடுத்து பிளாக் பற்றி ஒரு மாத காலமாக தெரிந்து கொண்டேன்.பல பிளாக்குகளுக்கு கருத்துகளும் தெரிவித்தேன்,  இடையில் ஒரு இருபது பிளாக்குகள் ஆரம்பித்து, பிறகு அது அனைத்தையும் நீக்கியும் விட்டேன்.

இதோ எனக்கு பிடித்தமான டிசைனில் ஒரு பிளாக் இது எனக்கு மனதிற்கு மிகவும் பிடித்துள்ளது,
நண்பர் ஸ்பார்க் கார்த்தி   www.sparkkarthikovai.blogspot.comஅவர்கள் எனது பிளாக்குக்கு அழகான  தலைப்பு படம்  அமைத்து கொடுத்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்....

பதிவு ஆரம்பித்து விட்டேன் என்ன எழுதுவது எப்படி எளிதுவது போன்ற குறிப்புகளை
இணைய நண்பர்கலான் நீங்கள் எனக்கு அளித்து உற்ச்சாக படுத்த வேண்டுகிறேன்.
தொடர்ந்து பதிவுகளில் சந்திப்போம். 

No comments: