Saturday, October 29, 2011


வல்லவனுக்கும் ஒரு வல்லவன் உண்டு

     xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx




மிகப்பெரிய குத்துச்சண்டை வீரரொருவர் தனது சொந்த வேலை விஷயமாக, அருகிலிருந்த பெரிய நகரத்திற்கு சென்றார், அனால் அன்று பார்த்து அவருக்கு வயிறு வேறு சரி இல்லை . போகிற வழியில் பொது கழிப்பிடத்தை பார்த்தவர், சரி இந்த வேலையை முடித்து விடுவோமென தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு கழிப்பிடத்திர்க்குள்  சென்றார்.

ஆனால் அவர் அணிந்திருந்த ஓவர் கோட் அவருக்கு சிரமமாக இருந்தது, சரி இதை என்ன செய்யலமெனே யோசித்தவர், சட்டென அந்த கழிப்பிடத்தின் நுழைவு வாயிலருகே  இருந்த ஆணியில் அந்த ஓவர் கோட்டை மாட்டிவிட்டு அது பாதுகாப்பாகஇருக்க  வேண்டுமென்பதற்காக  அதனருகில்  ஒரு  வாசகத்தை  எழுதி  வைத்தார்,
அது என்னவென்றால் ஒரு குத்து சண்டை வீரன் உள்ளே போயிருக்கிறான்  திரும்பி  வருவான்.
எழுதி வைத்து விட்டு உள்ளே சென்றவர், வேலையை எல்லாம் முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது ஒரே அதிர்ச்சி,
அங்கே அவரது கோட்டை காணவில்லை,
அதற்க்கு பதிலாக இன்னொரு வாசகம் இருந்தது அது " ஒரு ஓட்டப்பந்தய வீரன்  எடுத்து சென்றிருக்கிறான் திரும்பி வரவேமாட்டான், இது எப்படி இருக்கு 

நொந்து  போய்ட்டார்  நம்ம  பாக்ஸர்.

தவறாமல் கருத்துரையிடுங்கள் நான் வளர .........

No comments: