Saturday, December 24, 2011

ஹனுமனின் மனைவி பெயர் என்ன?

கல்யாண ஆஞ்சனேயர்


என்ன பெயர்ப் பலகையிலும் கல்யாண ஆஞ்சனேயர் என்று உள்ளதே. ஆஞ்சநேயர் இங்கு தேவியுடன் உள்ளாரே???

ஆனால் அனுமன் நைஷ்டிக பிரம்மசாரி ஆயிற்றே என்ற குழப்பம் தானே?

இப்படங்கள் மார்கழி மூல அனுமத் ஜெயந்தியன்று (2010) சென்னை அசோக் நகர் கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் அனுமனுக்கு ஒரு லட்சத்து எட்டு(100008) வடை மாலை உற்சவத்தின் போது எடுக்கப்பட்டவை. எண் கோணத் தேர் போன்ற அமைப்பில் பஞ்ச முக ஆஞ்சனேயர் அலங்காரமும் மற்றும் ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு அனுமன் கோலங்களும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த கோலங்கள் என்ன என்று சேவியுங்கள் பின்னர் விடையைப் பற்றி காணலாம்.


பஞ்ச முக ஆஞ்சனேயர்
(100008 வடைமாலைத்தேரில்)





அனுமனின் ஸ்வயமான முகத்துடன் நரசிம்மம், வராகம், ஹயக்ரீவர், கருடன் முகமும் சேர்ந்த கோலமே பஞ்சமுக ஆஞ்சநேயர் கோலமாகும். மஹிராவணனை வதம் செய்ய அவனது உயிர்நிலை உள்ள ஐந்து தேனீக்களை ஒரே சமயத்தில் கொன்றால்தான் முடியும் என்பதால் இராமச்சந்திர மூர்த்தியின் அருளினால்ஐந்து முகங்களைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சனேயராக கொண்ட கோலம்.


பஞ்ச முக ஆஞ்சனேயரின் ஐந்து முகங்களையும் தாங்கள் தெளிவாக இப்படத்தில் காணலாம். இன்னும் பஞ்ச முக ஆஞ்சனேயரைப் பற்றி அறிந்து கொள்ள இக்கட்டுரையை படியுங்கள் <பஞ்ச முக ஆஞ்சனேயர்>


அடுத்த கோலம்
நிருத்த ஆஞ்சனேயர்



அடுத்த கோலம்

அஞ்சனாமாதா
பால ஆஞ்சனேயர்



பக்த ஆஞ்சனேயர்


வீர ஆஞ்சனேயர்


யோக ஆஞ்சனேயர்


யோக நரசிம்மர் போல அமர்ந்து கைகளை முழங்காலின் மேல் வைத்துக்கொண்டு அருள் பாலிக்கும் கோலம்

சிவ பிரதிஷ்டா ஆஞ்சனேயர்


காசியிலிருந்து இராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவ பூஜை செய்வதற்காக லிங்கம் கொண்டு வந்த கோலம்



மேற்கு மாம்பலம் சத்ய நாரயணர்
திருக்கோவில் சஞ்சீவி ஆஞ்சனேயர்


அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ

சரிங்க நம்ம கேள்விக்கு வருவோம். ஹனுமனின் மனைவி பெயர்சுசீலை அதுவுமல்ல அவருக்கு ஒரு மகனும் உண்டு அவர் பெயர் மகரத்வஜன்.

உங்களைப் போல எனக்கும் சந்தேகம் வந்து குருக்களிடம் கேட்டேன். அவர் கூறியதாவது நாரதர் ஒரு தடவை அனுமனிடன் என்னைப் போல நீ பிரம்மச்சாரி இல்லை என்று கூறினாராம். ஆகவே அனுமன் இராமச்சந்திரமூர்த்தியிடம் கேட்க அவரும் அது உண்மைதான். நீ கடலை கடந்து போது உருவான மகன்தான் அவன்.

ஆகவே சுசீலை உனது மனைவி ஆகிறாள். ஒரு மனிதன் முழுமை பெருவது க்ருஹஸ்தன் ஆகும் போது தான் என்று விளக்கம் அளித்தாராம். இதன் அடிப்படையில்தான் கல்யாண ஆஞ்சனேயர் திருக்கோலம் அலங்காரம் செய்தேன் என்று கூறினார். விழுப்புரத்திற்கு அருகில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலில் ஆடி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது என்று ஒரு உதிரி தகவலையும் அளித்தார்.

இப்பதிவு மீள்பதிவு பார்க்காத  அன்பர்களுக்காக , இவ்வருடத்திய படங்கள் அடுத்த பதிவில் .    

6 comments:

Unknown said...

அம்மா... இது எனக்கும் புதியத் தகவலே...
ஒரு மனிதன் முழுமை அடைவது இல்லறத்தில் நீந்தி கரை எறியப் பிறகே தான்...
உண்மைதான் அப்போது ஆத்மாவும் தெளிவுற்று நிற்கும் அல்லவா!
நல்லப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

S.Muruganandam said...

//உண்மைதான் அப்போது ஆத்மாவும் தெளிவுற்று நிற்கும் அல்லவா!//

ஆம்

மிக்க நன்றி தமிழ் விரும்பி

Anonymous said...

படங்கள் மிகவும் அருமை.
புதுத் தகவலும் கூட. நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி ஸ்ரவாணி

Priya dharshini said...

Super pathivukal...happy new year to you...glad to follow ur space..

S.Muruganandam said...

Thank You very much Priya.

Wish you also Very Happy New Year.